இரு கண்கள் போதாது…

February 8, 2006

என் அப்பாவிற்கு,

by raasaiya @ 12:00 pm

கரிசலாய் இருக்கும் எனை
விதை நிலமென நினைத்து
விட்டுப்போன என் அப்பாவிற்கு,

ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து
ஆனந்தப்பட்டீர்கள்
ஒவ்வொரு காலையும்
என் காலனிகளை
பளபளப்பாக்கி
பரவசப்பட்டீர்கள்

பட்டம் வாங்கியபோது என்
பரம்பரையில் முதல்
பட்டதாரி என் மகனென
பார்த்தவரிடமெலாம்
சொல்லித்திரிந்தீர்கள்

வேலை தேடி
சென்னை சென்ற போது
சீமைக்கே அனுப்பியதாய்
சிலாகித்துக் கொண்டீர்கள்

வேலைக்கு சேர்ந்தும் என்
வீட்டுச் செலவிற்கு
பணம் அனுப்பினீர்கள்

 இன்று,
 நல்ல வேலை
 நல்ல சம்பளம்
 சொன்ன போதே
 பிறவிப்பயனையடைந்தேன் என்றீர்கள்

 நடக்கத்தானே கற்றுக்கொண்டேன்
 வாழத் தெரிந்து கொண்டேன்
 என நினைத்து விட்டுப்போனீர்களா?

2 Comments »

  1. Unmai

    Comment by Guhan — March 18, 2006 @ 11:45 am

  2. enna solrathunnu therilleengae…aana kanle mattum konjam laesa thanni

    Comment by enna solrathu — January 8, 2008 @ 11:55 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Powered by WordPress.com